சீனாவில் மீண்டும் அனல்காற்று எச்சரிக்கை

சீனாவில் மீண்டும் அனல்காற்று எச்சரிக்கை

1 mins read
28f7cb90-f494-4371-a9e4-c62fd297d6ea
சீனாவில் அடுத்த 10 நாள்களுக்கு வெப்பநிலை கடுமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெய்­ஜிங்: அடுத்­த பத்து நாள்­களில் நாட்­டின் கிழக்­கி­லி­ருந்து மேற்கு வரை வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேற்று முதல் வெப்­ப­நிலை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரிக்­கும் என்­றும் அனல்­காற்­றுக்கு முந்­திய மூன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட நாள்­கள் கடு­மை­யான வெப்­பம் நில­வும் என்றும் கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 5 முதல் 17ஆம் தேதி வரை நில­வி­ய­தைப் போன்றே இந்த அனல்­காற்­றும் இருக்­கும் என்­றா­லும் பெரும்­பா­லான பகு­தி­களில் வெப்­ப­நிலை 40 டிகிரி செல்­சி­யஸ் அல்­லது அதற்­கும் அதி­க­மாக இருக்­கும் என்று வானிலை மைய தலைமை அதி­காரி சொன்­னார்.

தொழிற்­சா­லை­கள் நிறைந்த ஜின்­சி­யாங் மாநி­லத்­தின் சில நக­ரங்­களில், வெப்­ப­நிலை அதி­க­ரிப்பு கார­ண­மாக சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஃபுஜியான், குவாங்­டான் போன்ற பகு­தி­களில் காட்­டுத் தீ ஏற்­படும் ஆபத்து உள்­ளது என அவ­சரகால மேலாண்மை அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது.