ஒரிகான்: உலகத் திடல்தட சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்தின் யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில், ஒலிம்பிக் வெற்றியாளரான இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 'ஏ' பிரிவில் இடம் பெற்று இருந்தார்.
இவர் தமது முதல் முயற்சியிலேயே 88.39 மீட்டர் தூரம் எறிந்தார். இதன் மூலம் அவர், உலகத் திடல்தடப் போட்டியில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 'பி' பிரிவில் இடம்பெற்று இருந்த மற்றோர் இந்திய வீரரான ரோகித் யாதவ் 80.42 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

