'மலேசியாவில் குறைவான பணவீக்கம்'

'மலேசியாவில் குறைவான பணவீக்கம்'

1 mins read
96a10fd5-bc5f-45b3-a3bf-2f46091e79d3
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சோகோ கடைத்தொகுதிக்கு அருகில்,தங்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.படம்: தி மலாய் மெயில் -

கோத்தா பாரு: தென்­கி­ழக்­கா­சிய நாடு­க­ளி­லேயே, மலே­சி­யா­வின் பண­வீக்­கம் குறை­வாக உள்­ள­தா­க­வும் அதற்கு அர­சாங்­கம் முன்­னெ­டுத்த முயற்­சி­களே கார­ணம் என்­றும் அந்­நாட்­டின் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் சொன்­னார்.

உலக அர­சி­யல் நெருக்­கடி கார­ண­மாக மலே­சி­யர்­க­ளின் வாழ்க்கை செல­வி­னம் அதி­க­ரித்து உள்­ளது.

இருப்­பி­னும், 77 மில்­லி­யன் ரிங்­கிட் உத­வித் தொகை ஒதுக்­கீடு உட்­பட பல்­வேறு முயற்­சி­க­ளின் வாயி­லாக, அதன் தாக்­கத்­தில் இருந்து மக்­க­ளைக் காக்க, அர­சாங்­கம் தொடர் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வதை அவர் குறிப்­பிட்­டார்.

கிளந்­தா­னில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் கலந்­து­கொண்டு பேசி­ய­போது இத­னைத் தெரி­வித்த அவர், மலே­சிய வர­லாற்­றில் ஆக அதிக அள­வில் 8.2 பில்­லி­யன் ரிங்­கிட் நிதி உதவி வழங்­கப்­பட்­ட­தை­யும் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, விலை­வாசி உயர்­வுக்கு எதிர்ப்பு தெரி­வித்து கோலா­லம்­பூ­ரில் நூற்­றுக்­க­ணக் கான­வர்­கள் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

பெரும்­பா­லும் மாண­வர்­களைக் கொண்ட அக்­குழு, தங்­களை 'டுரூன் இயக்­கம்' என்று கூறிக்­கொண்­டது.

டட்­ட­ரான் மெர்­டேக்கா நோக்கி செல்­ல­வி­ருந்த அவர்­களை, சோகோ கடைத்­தொ­கு­திக்கு அரு­கில் காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­

னர்.

ஜாலான் துங்கு அப்­துல் ரஹ்­மான் பகு­திக்கு அரு­கில்

1 கிலோ மீட்­டர் தூரத்­திற்கு காவல்­து­றை­யி­னர் பல அடுக்கு தடுப்­பு­களை அமைத்­த­னர்.

விலை­வாசி உயர்­வால் மக்­கள் சிர­மங்­களை அனு­ப­விக்­கும் நேரத்­தில் அமைச்­சர்­க­ளுக்குச் சம்­பள உயர்வு அளிப்­பது ஏன் என்று குழு உறுப்­பி­ன­ரான அமீர் கேள்வி எழுப்­பி­னார்.

விலை­வாசி உயர்­வைக் கட்­டுப்­படுத்­து­வ­தோடு, அமைச்­சர்­க­ளின் சம்­ப­ளம் குறைக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.