உக்ரேனின் ஒடேசா துறைமுக நகரில் ர‌ஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரேனின் ஒடேசா துறைமுக நகரில் ர‌ஷ்யா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

1 mins read
caba3b74-20de-4085-aec0-46079b09b3d8
-

கியவ்: உக்­ரே­னின் துறை­முக நக­ர­மான ஒடே­சா­மீது ர‌ஷ்யா மீண்­டும் ஏவு­க­ணைத் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக உக்­ரேன் ராணு­வம் கூறி­யுள்­ளது.

கருங்­க­டல் துறை­மு­கத்­தில் இருந்து தானிய ஏற்­று­ம­தி­யைத் தொடங்­கு­வ­தற்கு ர‌ஷ்­யா­வுக்­கும் உக்­ரே­னுக்கு இடையே ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தான சில மணி நேரங்­க­ளி­லேயே இந்­தத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

'காலி­பர்' எனும் கப்­ப­லில் இருந்து வீசப்­படும் ஏவு­க­ணை­கள் மூலம் ஒடேசா துறை­முக உள்­கட்­ட­மைப்பை ர‌ஷ்யா தாக்­கி­யது. நான்கு ஏவு­க­ணை­கள் வீசப்­பட்­டன," என்­றார் தெற்­குப் பகுதி அதி­காரி ஒரு­வர்.

இஸ்­தான்­புல் நாட்­டில், ஐநா­வுக்­கும் துருக்­கிக்­கும் ர‌ஷ்யா அளித்த உறு­தி­களை, இந்­தத் தாக்­கு­தல்­கள் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது என்று உக்­ரே­னிய வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் சொன்­னார்.

தானிய ஏற்­று­ம­திக்­கான பாது­காப்பு பாதை ஒப்­பந்­தத்­தின்­கீழ் தான் அளித்த உறு­தி­களை ர‌ஷ்யா நிறை­வேற்­று­வதை உறுதி செய்­யு­மாறு ஐநா­வுக்­கும் துருக்­கிக்­கும் உக்­ரேன் அழைப்பு விடுத்­துள்­ளது.

இத்­தாக்­கு­தல் குறித்து ர‌ஷ்­யா­வி­டம் இருந்து எந்­தப் பதி­லும் இல்லை.

மத்­திய உக்­ரே­னின் கிரோ­வோஹ்­ராட் பகுதி­யில் நடந்த மற்­றோர் ஏவு­க­ணைத் தாக்­கு­த­லில் மூன்று பேர் கொல்­லப்­பட்­ட­னர். ராணுவ விமா­னத் தளம், ரயில்வே உள்­கட்­ட­மைப்­பைக் குறி­வைத்து 13 ரஷ்ய ஏவு­க­ணை­கள் வீசப்­பட்­ட­தாக உள்­ளூர் ஆளு­நர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, உக்­ரே­னுக்கு மேலும் 270 மில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான ராணுவ உத­வி­வழங்கவுள்­ள­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது.