குரங்கம்மை தொற்றுடன் தப்பியோடியவர் பிடிபட்டார்

குரங்கம்மை தொற்றுடன் தப்பியோடியவர் பிடிபட்டார்

1 mins read
ad59608a-dcde-4df1-92a5-8ecda6d7a1d7
-

நோம் பென்: குரங்­கம்மை தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வு­டன் தாய்­லாந்­தில் இருந்து தப்­பி­யோ­டிய நைஜீ­ரிய ஆட­வர், கம்­போ­டி­யா­வில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டார்.

அவர் சிகிச்­சைக்­காக மருத்து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கம்­போ­டிய சுகா­தார அமைச்சு சொன்­னது.

விசா காலம் முடிந்த பிற­கும் தாய்­லாந்­தில் தங்­கி­யி­ருந்த அந்த 27 வயது ஆட­வ­ருக்கு, சென்ற திங்­கட்­கி­ழமை குரங்­கம்மை உறுதி செய்­யப்­பட்­டது.

தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வு­டன் தமது கைபே­சியை அணைத்து விட்டு, அவர் தப்­பி­யோடிவிட்­டார்.

புக்­கெட் நக­ரில் தங்­கி­யி­ருந்த அவர் இரண்டு பொழு­போக்­குக் கூடங்­க­ளுக்­குச் சென்­றிருந்தார். இத­னை­ய­டுத்து 142 பேருக்குப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்டு உள்ளது. காவல்­து­றை­யி­ன­ரும் அதி­கா­ரி­களும் அவ­ரைத் தேடும் வேட்­டை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். இந்­நி­லை­யில், சனிக்­கி­ழ­மை­யன்று அவ­ரின் கைபேசி சமிக்ஞை கம்­போ­டி­யா­வில் இருப்­ப­தைக் காட்­டி­யது.

குறிப்­பிட்ட இடத்­திற்­குச் சென்ற கம்­போ­டிய காவல்­து­றை­யி­னர், அவரைப் பிடித்து மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­தித்­த­னர்.

அந்த ஆட­வ­ரு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் பரி­சோ­தனை செய்து­கொள்­ளு­மாறு கம்போடிய சுகா­தார அமைச்சு அழைப்பு விடுத்­துள்­ளது.