மணிலா: பிலிப்பீன்சின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் மேயர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
தெற்கு லாமிடன் நகரின் முன்னாள் மேயரான திருமதி ரோஸ் ஃபுரிகேயைக் கொலை செய்ய, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது என்றார் குவென்சான் நகர காவல்துறைத் தலைவர் ரெமுஸ் மெடினா கூறினார்.
பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்த ஒரு தாயும் பட்டம் பெறுவதற்காகச் சென்றிருந்த அவரது மகளும் காயமடைந்தனர். அவர்களின் உதவியாளர் ஒருவரும் பாதுகாவல் அதிகாரி ஒருவரும் துப்பாக்கிச் சுட்டில் மாண்டுவிட்டனர்.
பல்கலைக்கழக பாதுகாவல் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில், சந்தேக நபர் காயமடைந்தார்.
சம்பவத்திற்குப் பிறகு, காரில் தப்பியோட முயன்ற சந்தேக நபரை, காவல்துறையினர் துரத்திச் சென்று பிடித்தனர். அவனிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவனிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தததாகவும் மேயரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு அவன் இருந்ததாகத் தெரிகிறது என்றார் மெடினா.
குவென்சான் நகரில் உள்ள மணிலா பல்கலைக்கழகத்தில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.

