லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் மாண்டனர். வேறு பலர் காயமடைந்தனர்.
அச்சம்பவம் லாஸ் ஏஞ்சலிசில் உள்ள 'பெக் பார்க்' எனும் பூங்காவில் நேர்ந்தது.
அங்கு நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற வாகன நிகழ்ச்சி ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எழுவர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக லாஞ் ஏஞ்சலிஸ் நகர தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.
அவர்களில் இருவர் பின்னர் மரணமடைந்தனர்.
ஆகக் கடைசி நிலவரப்படி சந்தேக நபர்கள் குறித்த தகவல் எதையும் காவல்துறை வெளியிடவில்லை.அண்மைக் காலமாக அமெரிக்காவில் அடுத்தடுத்து பல துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

