ஹாங்காங்: சீனாவின் மக்கள்தொகை 2025ஆம் ஆண்டுக்குள் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் அவ்வாறு சொன்னதாக குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டது.
சீனாவில் சென்ற ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளில் காணாத அளவு குறைவாக இருந்ததென நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்தது. இந்நிலை அந்நாட்டில் பல மாநிலங்களுக்குப் பொருந்தும்.
சீனாவில் பெண்கள் மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வகைசெய்ய சென்ற ஆண்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் அது அதிகம் பலனளிக்காததாகத் தெரிவிக்கப்பட்டது.