மியன்மாருக்கு ஆசியான் கண்டனம்

மியன்மாருக்கு ஆசியான் கண்டனம்

2 mins read
9a229d0e-7ad0-4329-8203-9e847349522e
-

நோம் பென்: மியன்­மா­ரில் நான்கு ஆர்­வ­லர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது ஏமாற்­ற­ம­ளிப்­ப­தோடு, ஆசி­யான் நாடு­கள் அதைக் கண்­டிப்­ப­தா­க­வும் ஆசியான் நாடு­க­ளுக்­குத் தலைமை தாங்­கும் கம்­போடியா கூறி­யுள்­ளது.

மரண தண்­ட­னையை நிறை­வேற்­று­வது பற்றி மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு கம்­போ­டியா பிர­த­மர் ஹுன் சென் மேல்­மு­றை­யீடு செய்­தி­ருந்­த­போ­தும், மியன்­மார் ராணுவ ஆட்­சிக் குழு அவர்­க­ளின் மரண தண்­ட­னையை நிறை­வேற்­றி­யது.

அமை­தி­யைக் கொண்டு வரு­வ­தற்­கான ஆசி­யான் நாடு­க­ளின் முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைக்க விருப்­ப­மில்­லா­ததை இது காட்­டு­வதாக உள்­ளது என்­றார் அவர்.

கடந்த பத்து ஆண்­டு­களில் அங்கு நிறை­வேற்­றப்­பட்ட இந்த முதல் மரண தண்­ட­னைக்­குப் பர­வ­லாக கண்­ட­னம் எழுந்­தது.

இது­கு­றித்து கம்­போ­டியா வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது மிக­வும் கவ­லை­யா­க­வும் வருத்­த­மளிப்­ப­தா­க­வும் உள்­ளது.

"இது, மியன்­மார் மட்­டு­மல்­லா­மல், வட்­டா­ரத்­தின் அமைதி, பாது­காப்பு, நிலைத்­தன்­மைக்கு ஆபத்தை விளை­விக்­கக்­கூ­டும்," என்று கூறப்­பட்­டி­ருந்­தது.

மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­தற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள மலே­சியா, மியன்­மா­ரின் இந்த நட­வ­டிக்­கையை மனி­த­நேயத்­திற்கு எதி­ரான குற்­ற­மாக பார்ப்பதாக சொன்னது.

ஆட்­சிக் கவிழ்ப்­பிற்­குப் பிறகு, மியன்­மா­ரில் ராணுவ ஆட்­சிக்கு எதி­ராக நடை­பெற்ற போராட்­டங்­களுக்கு உத­வி­ய­தாக நான்கு பேர் சென்ற திங்­கள்­கி­ழமை தூக்­கி­லிடப்­பட்­ட­னர்.

ஜன­நா­யக ஆர்­வ­ல­ரான ஜிம்மி எனும் 53 வயது கியாவ் மின் யூ, முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் ஆங் சான் ‌சூச்­சிக்கு நெருக்­க­மா­ன­வ­ரான 41 வயது ஃபியோ சீயா தாவ் ஆகி­யோ­ரும் அவர்­களில் அடங்­கு­வர்.

மியன்­மா­ரின் இரண்டு முக்­கிய ஜன­நா­யக ஆர்­வ­லர்­க­ளைத் தூக்­கி­லிட்­டது, ஜன­நா­யக ஆத­ரவு குரல் தொடர்ந்து மேலோங்­கச் செய்­யும் என்று அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் கூறி­னர்.

ஆனால், சட்­டத்­திற்கு உட்­பட்டு, மக்­களுக்கு நீதி கிடைக்­கும் வகை­யில் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­தாக மியன்­மார் ராணுவ ஆட்­சிக் குழு பதி­ல­ளித்­துள்­ளது.