டாக்கா: பங்ளாதேஷில் ஒவ்வோர் ஆண்டும் நீரில் மூழ்கி 14,000 பிள்ளைகள் இறந்துபோகின்றனர். அந்நாட்டில் ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகள் மாண்டுபோவதற்கான இரண்டாவது காரணமாகும் இது.
உலக சுகாதார நிறுவனமும் ஐநாவின் குழந்தைகள் அமைப்பும் தடுக்கக்கூடிய இறப்புகளைத் தடுத்து நிறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்திற்கும் தனிநபர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
உலகளவில் ஆண்டுதோறும் 230,000 பேர் நீரில் மூழ்கி மாண்டுபோகின்றனர். அதில் பத்தில் ஒன்பது சம்பவங்கள் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்படுகின்றன.

