எட்டுப் பேரைக் கொன்றவனுக்குத் தூக்கு தண்டனை

எட்டுப் பேரைக் கொன்றவனுக்குத் தூக்கு தண்டனை

1 mins read
18d78779-99ad-4a8e-baed-240ad7aa961b
-

தோக்­கியோ: ஜப்­பா­னின் தோக்­கியோ நக­ரில் சென்ற 2008ஆம் ஆண்டு ஏழுப் பேரைக் கத்­தி­யால் குத்­திக் கொன்ற ஆட­வர், நேற்று தூக்­கி­லி­டப்­பட்­ட­தாக உள்­ளூர் ஊடக செய்தி கூறு­கிறது. இது­கு­றித்து அந்­நாட்­டின் நீதித்­துறை உட­ன­டி­யாக எது­வும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை.

2008ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி, கேட்டோ என்ற அந்த ஆட­வர், பாத­சா­ரி­கள்­மீது வாக­னத்­தைச் செலுத்­திய பிறகு, அங்­கி­ருந்­த­வர்­க­ளைக் கத்­தி­யால் குத்­தி­னான்.

"நான் கொல்­வ­தற்­கா­க­தான் வந்­தேன். யாரைக் கொல்­கி­றேன் என்று கவ­லை­யில்லை," என்று அவன் விசா­ர­னை­யின்­போது கூறினான்.