வாஷிங்டன்: கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு சீனாவின் வூஹான் நகரில் உள்ள விலங்கு சந்தையே காரணம் என்று இரண்டு ஆய்வுகள் கூறுகின்றன.
கிருமிப் பரவல் சீனாவின் ஹுனான் சந்தைக்குள் மட்டுமே இருந்ததையும் நவம்பர் 2019க்கு முன்பு மனிதர்களிடம் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதையும் அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தின.
இந்த ஆய்வு முடிவுகள் பிரபல சஞ்சிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, வூஹான் விலங்குச் சந்தையில் இருந்து கிருமி பரவியிருக்கக்கூடும் என்று தாம் எண்ணுவதாக சொன்னார் ஆய்வை வழிநடத்திய அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்.
முன்பு இவர், வூஹான் ஆய்வகத்தில் இருந்து கிருமி கசிந்துஇருக்கலாம் என்று கூறினார். ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு தனது எண்ணத்தை அவர் மாற்றிக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, வூஹான் நகரில் மீண்டும் கிருமிப் பரவல் தலைதூக்கியுள்ளதையடுத்து, அங்கு வர்த்தகங்கள், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன.
மக்கள் பெருமளவில் ஒன்று கூடுவதற்கும் உணவகங்களில் உணவருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்குக் கூடங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மூன்று நாள்களுக்கு இத்தடை நீடிக்கும்.

