தென்சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்

தென்சீனக் கடலில் அமெரிக்க போர்க்கப்பல்

2 mins read
5fd0a2e5-6f99-4ce1-b1eb-309c2855f8e3
-

சிங்­கப்­பூர்: போர் விமா­னங்­கள் தாங்கிய அமெ­ரிக்­கா­வின் விமா­னந்­தாங்­கிக் கப்­பல் ஒன்று தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் நுழைந்­தது. இது வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் நட­வ­டிக்­கை­ என்கிறது அமெ­ரிக்­கா­வின் 7வது படைப் பிரிவு.

இருப்­பி­னும் நேன்சி பெலோ­சி­யின் தைவான் பய­ணம் குறித்த பேச்­சுக்கு மத்­தி­யில், இது பதற்­றத்தை அதி­க­ரித்­துள்­ளது.

அணு­வாயுத ஆற்றல் கொண்ட யுஎஸ்­எஸ் ரோனல்ட் ரீகன் என்ற அந்த கப்­பல், ஐந்து நாள்­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்­தது. ஜூலை 26ஆம் தேதி மீண்­டும் தனது பய­ணத்­தைத் தொடங்­கிய அக்­கப்­பல், தென் சீனக் கடல் பகு­தி­யில் நுழைந்­த­த­தாக படைப் பிரிவு சொன்­னது.

"சுதந்­தி­ர­மான, திறந்த இந்தோ-பசி­பிக் வட்­டா­ரத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில், ரீகன் தனது வழக்­க­மான சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தது," என்­றார் அமெ­ரிக்க அதி­காரி ஒரு­வர். இருப்­பி­னும், அக்­கப்­பல் தொடர்ந்து எங்குச் செல்­கிறது என்­பது பற்றி பதி­ல­ளிக்க படைப் பிரிவு மறுத்­து­விட்­டது.

பெலோசி தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டால், கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்க சீனா தயா­ராக உள்­ள­தாக வெளி­யு­றவு அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் கூறி­யி­ருந்­தார்.

கடல், வான் பரப்­பில் சீனா ரோந்­துப் பணி­களை அதி­க­ரிக்­குமே தவிர, கடும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான வாய்ப்­புக் குறைவு என்று இந்தோ-பசி­பிக் வட்­டார தற்­காப்பு கொள்கை நிபு­ண­ரான பிளேக் ஹெர்­ஸிங்­கர் சொன்­னார்.

சீனாவின் மிரட்­ட­லைக் கண்­டு­கொள்­ளாத தைவான் மக்­கள்

அதேபோல், சீனா­வின் இந்த எச்­ச­ரிக்­கையை பெரும்­பா­லான தைவான் மக்­களும் பெரி­தாக எடுத்­துக்­கொள்­ள­வில்லை. சீனா­வின் மிரட்­டல் தங்­க­ளுக்­குப் பழக்­க­மாகி­விட்­டது என்­றும் பதற்­ற­ம­டைய ஒன்­றும் இல்லை என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

"சீனா­வின் மிரட்­டல் வெறும் வாய்­பேச்­சு­தான்," என்­றார் 30 வயது கல்­வித் துறை ஊழி­ய­ரான சென் யென்-சென்.

"பெலோ­சி­யின் பய­ணம், தைவான் மீதான அமெ­ரிக்­கா­வின் கடப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கும்," என்று தைவான் எதிர்க்­கட்­சி­யான கோமிங்­டாங் கட்சியின் அனைத்­து­லக விவ­கா­ரங்­க­ளுக்­கான இயக்­கு­நர் அலெக்­சாண்­டர் ஹுவாங் கூறி­னார்.

இதற்­கி­டையே, தன்­னு­டன் பய­ணம் மேற்­கொள்ள சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு பெலோசி அழைப்பு விடுத்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.