மணிலா: பிலிப்பீன்சில் பயன்படுத்தப்படாத பாலம் ஒன்றில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பாலம் உடைந்து, கீழேயிருந்த ஆற்றுக்குள் பிள்ளைகள் விழுந்தனர். இதில் எட்டுப் பிள்ளைகள் மாண்டுவிட்டனர். மேலும் ஐந்து பிள்ளைகள் காயம் அடைந்தனர்.
மணிலாவிற்கு அருகேயுள்ள டஸ்மரினாஸ் நகரத்தில் செவ்வாய்க்கிழமையன்று இந்த சோக சம்பவம் நடந்தது. இரண்டு நாள்களுக்குப் பிறகு, இமுஸ் ஆற்றில் விழுந்த 12 முதல் 17 வயதுடைய பிள்ளைகளின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

