தொடர் நில அதிர்வுகளால் பீதி; சாலையோரத்தில் தூங்கிய மக்கள்

தொடர் நில அதிர்வுகளால் பீதி; சாலையோரத்தில் தூங்கிய மக்கள்

1 mins read
7501fe5b-0fba-4a71-9340-2a866b89a9b2
அப்ரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களுக்குத் தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களைச் சந்தித்த பிலிப்பீன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியர் (வலக்கோடி), அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்தார். படம்: இபிஏ -

மணிலா: நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து பல­முறை நில­அ­திர்­வு­கள் ஏற்­பட்­ட­தால், இரவு நேரத்­தில் வீட்­டிற்­குச் செல்ல அஞ்­சிய பிலிப்­பீன்ஸ் மக்­கள் சாலை­யோ­ரங்­க­ளி­லும் பூங்­காக்­க­ளி­லும் தூங்­கி­னார்­கள்.

பிலிப்­பீன்­சின் அப்ரா மாநி­லத்­தில் புதன்­கி­ழ­மை­யன்று 7 என்ற ரிக்­டர் அள­வி­லான நில­ந­டுக்­கம் தாக்­கி­யது. அதில் ஐந்து பேர் மாண்­டு­விட்­ட­னர். 150க்கும் மேற்பட்டோர் காய­ம­டைந்­த­னர்.

இதில் பல சிறிய, உயர்­மா­டிக் கட்­ட­டங்­கள் சேதம­டைந்­தன. ஆங்­காங்கே நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டன.

"ஒவ்­வொரு 20 அல்­லது 15 நிமி­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­ நில அதிர்­வு­கள் ஏற்­பட்­டன," என்­றார் அப்ரா மாநி­லத்­தின் உண­வக உரி­மை­யா­ளர் ஒரு­வர்.

மக்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­களை விரைந்து செய்­ய­வும் மீட்பு, உதவி நட­வ­டிக்­கை­களை முடுக்கி­வி­ட­வும் அந்­நாட்­டின் அதி­பர் மார்­கோஸ் ஜூனி­யர் உத்­த­ர­விட்­டு உள்ளார்.