பாரிஸ்: பிரான்சிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டு அதிபர் இமானுவல் மெக்ரோனைச் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, "உக்ரேன்-ரஷ்யா சண்டையை முடிவுக்கு கொண்டு வரவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இப்போர் ஏற்படுத்திய விளைவுகளைச் சமாளிப்பதற்குத் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் இருவரும் ஒப்புக்கொண்டதாக," பிரான்ஸ் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு, ஏமன் சண்டை, ஈரானின் அணுவாயுதத் திட்டம் உள்ளிட்ட வட்டாரப் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்
டது.
கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உதவும் வகையில் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு இளவ ரசரிடம் மெக்ரோன் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் மாளிகை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன்னர் கூறினர்.

