மாஸ்கோ: ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் 15 மாடி கட்டடம் ஒன்று தீப்பிடித்ததில் எட்டுப் பேர் மாண்டுவிட்டனர். மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நள்ளிரவில் நேர்ந்த இச்சம்பவத்தின்போது, தீ எச்சரிக்கை மணி சரியாக வேலைசெய்யவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர்.

