கோலாலம்பூர்: நாளை முதல் மலேசியாவுக்குச் செல்பவர்கள் மைசெஜாத்ரா செயலி மூலம் பயணிகள் அட்டையைச் சமர்ப்பிக்கத் தேவைஇல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள டிரேஸ்
டுகேதர் செயலியைப் போல மலேசியாவில் மைசெஜாத்ரா செயலி பயன்படுத்தப்படுகிறது.
மைசெஜாத்ரா செயலியில் உள்ள மின்னட்டைகள் மூலம் பயணி
களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்த பிறகே அவர்களை மலேசியாவுக்குள் அனுமதிக்கும் அணுகுமுறை இன்றுடன் முடிவடைகிறது.
மலேசியாவுக்குப் பயணிகள் வருவதை எளிதாக்க இந்த நட
வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார
அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
மலேசியாவில் சுகாதாரக் கட்டமைப்பு நல்ல நிலையில் இருப்பதாகவும் கொவிட்-19 பாதிப்பு
கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், மலேசியாவுக்கு வரும் பயணிகளுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று அறிகுறிகள்
உள்ளதா என்பதைக் கண்டறிய
சோதனைச்சாவடிகளில் உள்ள அதிகாரிகள் அவர்கள் அனை
வரையும் உன்னிப்பாகக் கண்
காணிப்பர் என்று திரு கைரி தெரிவித்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் பயணிகள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார் அவர்.

