லண்டன்: அல்காய்தா பயங்கரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லாடன் குடும்பத்தினரிடமிருந்து பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் ஒரு மில்லியன் பவுண்டு (S$1.68 மி.) நன்கொடை பெற்றதாக 'சண்டே டைம்ஸ்' செய்தி வெளியிட்டு உள்ளது. 'வேல்ஸ் இளவரசர் அறக்கட்டளை' அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டு, பின்லாடனின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரிடமிருந்து அப்பணத்தைப் பெற்றது. அரச குடும்பத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரித்தும் அந்நன்கொடை பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அறங்காவலர்களின் கவனமான பரிசீலனைக்குப் பிறகே அது பெறப்பட்டதாக அறக்கட்டளையின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
பின்லாடன் குடும்பத்திடமிருந்து இளவரசர் சார்ல்ஸ் நன்கொடை
1 mins read
-

