தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மலேசியப் பெண்களின் வெளிநாட்டுப் பிள்ளைகளுக்கு குடியுரிமை கிடையாது'

1 mins read
b98a76dc-b8ed-4fab-bf9d-6b9aa4e196ab
-

புத்­ரா­ஜெயா: வெளி­நாட்­டி­ன­ரைத் திரு­ம­ணம் செய்­து­கொண்ட மலே­சி­யப் பெண்­க­ளுக்கு வெளி­நா­டு­களில் குழந்தை பிறந்­தால், அந்­தக் குழந்­தை­க­ளுக்கு இயல்­பா­கவே மலே­சி­யக் குடி­யு­ரிமை கிடைக்­காது என்று மலே­சி­யா­வின் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

ஆனால், மலே­சிய ஆண்­களுக்கு இது பொருந்­தாது. அவர்­களது பிள்­ளை­க­ளுக்கு இயல்­பா­கவோ மலே­சி­யக் குடி­யு­ரிமை கிடைத்­து­வி­டும்.

எனவே, இது பார­பட்­ச­மான குடி­யு­ரிமை விதி என்று மலே­சி­யத் தாய்­மார்­கள் சிலர் தங்­க­ளது எதிர்ப்பை தெரி­வித்­துள்­ள­னர்.

முன்­ன­தாக, வெளி­நாட்­ட­வர்­களைத் திரு­ம­ணம் செய்து கொண்டு வெளி­நாட்­டில் குழந்­தை­களை ஈன்­றெ­டுத்த ஆறு மலே­சிய பெண்­கள் தங்­கள் குழந்­தை­க­ளுக்கு இயல்­பாக மலே­சிய குடி­யு­ரி­மைத் தகுதி கிடைக்க வேண்டி உயர் நீதி­மன்­றத்­தில் வழக்­குப் பதிவு செய்­தி­ருந்­த­னர். அதில் தாய்­மார்­க­ளுக்கு சாத­க­மா­கத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

ஆனால், மலே­சிய அர­சாங்­கம் அத்­தீர்ப்பை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்து நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­தது.

இதனை விசா­ரித்த மூன்று பேர் அடங்­கிய நீதி­ப­தி­கள் குழு­வில், இரு­வர் உயர் ­நீ­தி­மன்ற உத்­த­ரவுக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­தைத் தொடர்ந்து, பிள்­ளை­க­ளுக்கு இயல்­பா­கவே குடி­யு­ரிமை கிடைக்­காது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மலே­சி­யப் பெண்­கள் வெளி­நாட்­டில் பிறந்த தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு மலே­சி­ய குடி­யு­ரிமை வேண்டி விண்­ணப்­பிக்­க­லாம். ஆனால், மிக­வும் குறை­வா­ன­வர்­க­ளுக்கே குடி­யு­ரிமை வழங்­கப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

2013 முதல் 2018ஆம் ஆண்­டு வரையிலான காலக்கட்டத்தில் குடி­ உ­ரிமை வேண்டி வந்த 4,000 விண்­ணப்­பங்­களில், 142 மட்­டுமே அங்கீ­கரிக்­கப்­பட்­ட­தாக அரசு சாரா நிறு­வ­னம் ஒன்று கூறி­யது.