ஹிரோ‌ஷிமா தாக்குதலின் 77வது ஆண்டு நிறைவு அனுசரிப்பு

1 mins read
aff1be61-1c98-4fcd-8558-0ec5529c72e6
-

ஹிரோ‌ஷிமா: ஹிரோ­ஷிமா அணு­குண்­டுத் தாக்­கு­த­லின் 77வது ஆண்டு நிறை­வைக் குறிக்­கும் வகை­யில் நேற்று அஞ்­சலி நிகழ்ச்­சி­கள் அனு­ச­ரிக்­கப்­பட்­டன.

ஹிரோ­‌ஷி­மா­வில் உள்ள அமை­திப் பூங்­கா­வில் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் கூடி­னார்­கள்.

இதில் ஐநா பொதுச்­செ­ய­லா­ளர் அன்­டோ­னியோ குட்­ட­ரெஸ் கலந்து­கொண்­டார்.

ரஷ்யா-உக்­ரேன் போரைத் தொடர்ந்து ஏற்­பட்­டுள்ள புதிய ஆயுதப் போட்டி குறித்து அவர் கவ­லை தெரி­வித்­தார்.

"அணு­வா­யு­தங்­கள் முட்­டாள்­த­ன­மா­னவை. அவற்­றால் நிச்­ச­ய­மாகப் பாது­காப்பு இல்லை. அவை பேர­ழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை," என்­றார் அவர்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி அமெ­ரிக்­கா­வின் பி-29 ரக போர் விமா­னம் எனோலா கே, "லிட்­டில் பாய்" என்ற புனைப்­பெ­யர் கொண்ட குண்டை வீசி ஹிரோ­ஷிமா நக­ரத்தை அழித்­தது.