கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாகத் தகவல்: விழிப்பு நிலையில் ராணுவம்

கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாகத் தகவல்: விழிப்பு நிலையில் ராணுவம்

1 mins read
bcbbbe13-4cdf-4eea-8947-415fd1edbf6d
-

கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் போராட்டக்காரர்கள் மீண்டும் பேரணியில் ஈடுபடப்போவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவம் விழிப்பு நிலையில் உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பேரணியை நடத்த போராட்டக்காரர்கள் தயாராகியுள்ளனர்.

இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகக் காவல் துறை அறிந்தது. சிறப்பு அதிரடிப்படையினரும் ஆயுதப்படையினரும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கலவரத் தடுப்புப் பிரிவு தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குழுக்கள் விழிப்புடன் வைத்து இருப்பதாக அறியப்படுகிறது.

அதிபர் மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பை பாதுகாப்பதற்காக பல சிறப்புக் காவல் துறையினர் வெளி மாநிலங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அக்குரேகொடவில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே திடீரென சென்றுள்ளதாகவும் நம்பப்படுகிறது