ஜெருசல பேருந்தில் துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர் கைது

ஜெருசல பேருந்தில் துப்பாக்கிச் சூடு, சந்தேக நபர் கைது

1 mins read
cb5571c6-1a68-4eeb-a8d5-b4504105c856
-

ஜெரு­ச­லம்: ஜெரு­ச­லத்­தில் பேருந்து ஒன்­றின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுத் தாக்­கு­த­லில் ஒரு கர்ப்­பிணி உட்பட எட்டு பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். அவர்­களில் அமெ­ரிக்க குடி­மக்­களும் அடங்­குவர்.

உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வில் நிகழ்ந்த தாக்­கு­தலை நடத்தியதாகச் சந்­தே­கிக்­கப்­படும் ஆட­வரை இஸ்­ரே­லிய காவல்­து­றை­ கைது­செய்­த­து. சந்­தேக நபர் தானே சர­ண­டைந்­த­தா­க காவல்துறை சொன்­னது. யூதர்­கள் பிரார்த்­த­னைக்கு ஒன்­று­கூ­டும் 'வெஸ்­டர்ன் ஹால்' பகுதிக்கு அருகே தாக்குதல் நிகழ்ந்­தது.

பொது­மக்­கள் பயன்­ப­டுத்­தும் பேருந்து ஒன்­றின் மீதும் சாலை­யில் மக்­களை நோக்­கி­யும் துப்­பாக்கி ஏந்­திய ஒரு­வர் சுட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அமெ­ரிக்க குடி­மக்­கள் காய­மடைந்­த­தைத் தொடர்ந்து தாங்­கள் அதிர்ச்­சிக்­கும் வருத்­தத்­திற்­கும் ஆளா­கி­யி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் தூத­ர­கம் கூறி­யது. காய­ம­டைந்­தோ­ரின் அடை­யா­ளம் குறித்த விவ­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தாக்குதல்காரர் ெஜருசலத்தைச் சேர்ந்த குற்றப் பின்னணி இருப்பவர் என்று இஸ்ரேலிய பிரதமர் யாயர் லப்பிட் நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.