நஜிப்: புதிய ஆதாரத்தைப் பரிசீலிக்க வேண்டும்

நஜிப்: புதிய ஆதாரத்தைப் பரிசீலிக்க வேண்டும்

1 mins read
61a9f15b-8829-4c26-a75d-9fc7e776f43b
-

கோலா­லம்­பூர்: 1எம்­டிபி மோசடி வழக்கு தொடர்­பாகப் புதிய

ஆதா­ரம் ஒன்றைக் கூட்டரசு நீதி­மன்­றம் பரி­சீ­லிக்க வேண்­டும் என்று மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

தமக்கு விதிக்­கப்­பட்ட 12 ஆண்டுகள் சிறைத் தண்­ட­னை­யைத் தள்­ளு­படி செய்யும் நோக்கில் மீண்­டும் வழக்கு விசா­ரணை நடத்த வேண்­டும் என்று அவர் விண்­ணப்­பம் செய்­துள்­ளார். அதற்­கான இறுதி மேல்­மு­றை­யீடு தற்­போது நடை­பெற்று வரு­கிறது.

1எம்­டிபி நிதி­யி­லி­ருந்து 4.5 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை ($6.19 பில்­லி­யன்) நஜிப் கையா­டி­ய­தாக அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தம்­மீது சுமத்­தப்­பட்ட

மோச­டிக் குற்­றச்­சாட்­டு­களை நஜிப் மறுத்து வரு­கி­றார்.

இறுதி மேல்­மு­றை­யீ­டு

இம்­மா­தம் 26ஆம் தேதி­ வரை தொடரும் என்று தெரி­விக்­கப்­

பட்­டது. நஜிப்பின் மேல்­மு­றை­யீட்டை நீதி­மன்­றம் ஏற்க மறுத்­தால், அவர் உட­ன­டி­யாக சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்க வேண்­டி­வ­ரும் என நம்­பப்­ப­டு­கிறது.

நீதிமன்றத்தில் நஜிப் ரசாக்.

படம்: இபிஏ