வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது காரை மோதி, பிறகு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆடவர், கடைசியில் அதே துப்பாக்கியைக் கொண்ட தமது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அந்த ஆடவர் காரைவிட்டு வெளியேறியபோது அது தீப்
பிடித்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்புக்குச் சொந்தமான உல்லாச விடுதியில் இருந்த ரகசிய ஆவணங்களை அமெரிக்க கூட்டரசு புலனாய்வுப் பிரிவினர் பறிமுதல் செய்ததை அடுத்து, இந்தச் சமபவம் நிகழ்ந்திருப்பது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

