லாஸ் ஏஞ்சலிஸ்: இந்தியாவின் பழைய சாதியக் கட்டமைப்புக்கு எதிராக அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
சாதியத்தைப் பற்றி நன்கு புரிந்துகொண்டு அதை எதிர்கொள்ளும் நோக்குடன் அதைப் பற்றி அந்த நிறுவனங்கள் கற்று வருகின்றன.
இதில் ஆப்பிள் நிறுவனம் முக்கிய இடம்பிடித்துள்ளது. அமெரிக்காவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் சாதிய முறையைக் களையும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
சாதியக் கட்டமைப்பு இந்தியர்களிடையே தலைமுறை தலைமுறையாக பாகுபாடு
களையும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையையும் விதைத்திருப்பதாக அமெரிக்க நிறு
வனங்கள் சாடின. சாதியை அடிப்படை
யாகக் கொண்ட பாகுபாடுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் ஏறத்தாழ இரண்டு ஆண்டு களுக்கு முன்பு தமது ஊழியர்களுக்குத் தடை விதித்தது. ஏற்கெனவே, இனம்,
சமயம், பாலினம், வயது, வழி மரபு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராக அது தடை விதித்திருந்தது.
சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக ஆப்பிள் நிறுவனம் விதித்த தடை தற்போதுதான் வெளியுலகிற்கு அறிவிக்கப்படுகிறது. பாகுபாடுகளுக்கு எதிராக அமெரிக்காவில் நடப்பில் உள்ள சட்டங்களில் சாதிக்கு எதிரானது இன்னும் இடம்பெறவில்லை.