இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ்மொழியில் தேசிய கீதம்

இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழ்மொழியில் தேசிய கீதம்

1 mins read
e1bcb1b3-2ad2-4ad2-a3c9-ca0a2fc7f18a
-

கொழும்பு: இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வின்­போது மீண்­டும் தமி­ழி­லும் தேசி­ய கீதத்­தைப் பாடு­வ­தற்கு அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

அதி­பர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யில் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் அடுத்த ஆண்டு 75வது சுதந்­திர தினக் கொண்­டாட்­டங்­க­ளுக்­கான நட­வ­டிக்­கை­கள் தொடர்­பில் கலந்து­ரை­யா­டப்­பட்ட போது தமிழி­லும் தேசி­ய கீதம் பாட வேண்­டும் என்ற யோச­னையை அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா முன்­வைத்­­தார்.

இதற்கு முன்பும், சுதந்­திர தினத்­தில் தேசிய கீதம் தமி­ழி­லும் பாடப்­பட்­ட­மையை சுட்­டிக்­காட்­டிய அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா, எதிர்­கா­லத்­தி­லும் அந்த நடை­முறை­யைப் பின்­பற்ற வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யு­னார்.

அந்த யோச­னையை அமைச்­சர்­கள் ஒரு­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்டனர்.

இலங்­கை­யில் சிங்­க­ளம், தமிழ் என இரண்­டும் அதி­கா­ர­பூர்வ மொழி­யாக உள்ள நிலை­யில், அந்த மொழி­களில் தேசி­ய கீதத்­தைப் பாடு­வ­தில் எந்­தப் பிரச்­சினை­யும் கிடை­யாது என்று அமைச்­ச­ர­வைத் தீர்­மா­னங்­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரான பந்­துல குண­வர்­தன தெரி­வித்தார்.