யங்கூன்: மியன்மாரின் ராணுவ அரசாங்கம், ரஷ்யாவிடமிருந்து கச்சா எ;ண்ணெய், எரிபொருள் வாங்க திட்டமிட்டுள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக ராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதில் மியன்மாரும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரேன் மீது படை யெடுத்ததற்காகவும் மியன்மார், ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்த தற்காகவும் அவ்விரு நாடுகள் மீது ஐரோப்பிய பல்வேறு தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாண்டு இறுதியில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி பொருளை படிப்படியாக நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்து உள்ளதால் புதிய வாடிக்கையாளர்களை ரஷ்யா தேடி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் "ரஷ்யா வில் இருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய அனுமதி தரப்பட்டு உள்ளது. ரஷ்யப் பெட்ரோலின் விலை, தரம் சாதமாக உள்ளது என்று," என்று ராணுவப் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே மியன்மார் ராணுவ அரசாங்கத்துடனான உறவை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தற்காத்துப் பேசியுள்ளார்.

