ஹாங்காங்: ஹாங்காங்கில் 47 ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்பான தேசிய பாதுகாப்பு வழக்கில் விசாரணை தொடர்பான தகவல்களை வெளியிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு முந்திய கலந்துரையாடலை வெளியிட விதிக்கப்பட்ட தடை அகற்றப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் விடியவிடிய நகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 47 ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள், விசாரணைக்கு தயாராக அதிக நேரம் தேவை என்று அடிக்கடி கேட்டுக்கொண்டதால் வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை 13 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.