ஜார்ஜ்டவுன்: பானம் எதையும் வாங்கி அருந்தாமல் உணவு மேசையை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் காசு வசூலிக்கும் நடைமுறையை மலேசியாவில் பல உணவங்காடி நிலையங்கள் தொடங்கிஇருக்கின்றன.
அப்படி பானம் எதையும் வாங்காமல் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் 50 காசுகள் (S$0.15) தர வேண்டும் என்ற அறிவிப்புப் பலகையை (படம்) வைத்துள்ளார் காப்பிக்கடை உரிமையாளரான மிக்கா ஊய், 37.
"சில நேரங்களில் ஐந்து பேர்வரை எதையும் வாங்காமல் மேசையில் அமர்ந்துள்ளனர்," என்றார் திரு ஊய்.
பானம் வாங்கும்படி வாடிக்கையாளர்களைத் தம்மால் வற்புறுத்த முடியாது என்ற திரு ஊய், அதே நேரம் தமது விருந்தோம்பலால் அவர்கள் ஏமாந்து போகாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவேன் என்றார்.
"பானம் வாங்காத ஒரு வாடிக்கையாளர் 50 காசு கொடுத்தால், பதிலுக்கு அவருக்குத் தண்ணீர் கொடுப்பேன்," என்றார் அவர்.
இந்நிலையில், தமது அறிவிப்புப் பலகையைக் கண்டு வாடிக்கையாளர்கள் பலரும் தமது சூழலைப் புரிந்துகொண்டு, ஆதரவளிப்பதாகவும் அவர் சொன்னார்.
அவரது கடைக்கு அருகிலுள்ள உணவங்காடி நிலையத்தில் பானம் வாங்காமல் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ஒரு ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்த ஒட்டுவில்லை எல்லா மேசைகளிலும் ஒட்டப்பட்டு உள்ளது. மேலும், அங்கேயே அருந்தாமல் பானத்தை வாங்கிச் செல்வோரிடமிருந்து 30 காசு வசூலிக்கப்படுகிறது. படம்: தி ஸ்டார்