சுற்றுப்பயணிகள் கூடுதல் காலம் தங்க அனுமதிக்கும் தாய்லாந்து

சுற்றுப்பயணிகள் கூடுதல் காலம் தங்க அனுமதிக்கும் தாய்லாந்து

1 mins read
840f4217-22a5-41e8-8cfa-fb08acca5f9a
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் கொரோனா பர­வல் குறைந்து வரு­வதையடுத்து, அங்கு செல்­லும் வெளி­நாட்­டுச் சுற்­றுப்­ப­ய­ணி­கள் 30 நாள்­கள்­வரை தங்­கி­யி­ருக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­களுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யில், இவ்­வாண்டு அக்­டோ­பர் முதல் அடுத்த ஆண்டு மார்ச்­வரை இந்த விதி நடப்­பி­லி­ருக்­கும். வந்­தி­றங்­கி­ய­பின் விசா பெறும் நடை­மு­றை­யின்­கீழ் 18 பகு­தி­களில் இருந்து வரு­வோ­ருக்கு இது பொருந்­தும்.

அத்­து­டன், இப்­போது 50க்கும் மேற்­பட்ட பகு­தி­களில் இருந்து வரு­வோர் 30 நாள்­கள் தங்­கி­யி­ருக்க அனு­ம­திக்­கப்­படும் நிலை­யில், அது 45 நாள்­க­ளாக அதி­க­ரிக்­கப்படும்.

இத­னி­டையே, இவ்­வாண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி­வரை வெளி­நா­டு­களில் இருந்து தாய்­லாந்­திற்கு 3.78 மில்­லி­யன் பேர் வரு­கை­பு­ரிந்­துள்­ள­னர். இது, கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தைக் காட்­டி­லும் 3,214% அதி­கம். அவர்­கள் மூல­மா­கத் தாய்­லாந்­திற்கு 176.3 பில்­லி­யன் பாட் (S$6.9 பி.) வரு­மா­னம் கிட்­டி­யது.