சுவீடனின் மால்மோ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஆடவர் ஒருவர் மாண்டார்.
காயமடைந்த ஒரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலை மேற்கொண்ட பதின்ம வயது ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தாக்குதலுக்குக் குற்றவியல் பின்னணி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

