நீந்தியே எல்லையைத் தாண்டி தப்பிய ஊழியர்கள்

நீந்தியே எல்லையைத் தாண்டி தப்பிய ஊழியர்கள்

1 mins read
44f2d13e-1214-49dc-a309-c38303772548
-

நோம் பென்: சம்­ப­ளம் இல்­லா­மல் கம்­போ­டி­யா­வில் உள்ள சூதாட்­டக் கூடங்­களில் வேலை செய்து வந்த வியட்­னா­மிய ஊழி­யர்­கள் பலர் எல்­லைப் பகு­தி­யில் உள்ள ஆற்­றில் நீந்தி வியட்­னா­முக்­குத் தப்­பி­னர்.

வியட்­னாம் எல்­லை­யோ­ரம் உள்ள கண்­டால் மாநி­லத்­தில் இருக்­கும் சூதாட்­டக் கூடத்­தில் பாது­கா­வ­லர்­க­ளு­டன் சண்­டை­யிட்டு ஏறத்­தாழ 40 வியட்­னா­மிய ஊழி­யர்­கள் தப்­பி­னர். இவர்­கள் ஆள் கடத்­தல்­கா­ரர்­க­ளால் கம்­போ­டி­யா­வுக்­குள் கடத்­தப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று அந்­நாட்டு அர­சாங்­கம் தெரி­வித்­தது. இவர்­க­ளைப் போன்­றோ­ருக்கு உதவி செய்து வரு­வ­தாக கம்­போ­டியா அர­சாங்­கம் கூறி­யது.