புத்ராஜெயா: அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி உட்பட அக்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு கள் அளிக்கப்பட்ட பிறகே
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டுப் பிரதமரும் அம்னோ கட்சியைச் சேர்ந்தவருமான திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவிப்பார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இதை திரு இஸ்மாயில் சப்ரி மறுத்துள்ளார்.
வழக்குகளின் தீர்ப்புகளுக்
காகக் காத்திருக்கப் போவதில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
"பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வழக்குகளின் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க முடியாது. தீர்ப்புகள் நீதிமன்றம் சம்பந்தப்பட்டவை. எப்போது தீர்ப்
பளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு எனக்கு அதிகாரம் இல்லை," என்றார் திரு இஸ்மாயில் சப்ரி.
அம்னோ தலைவர் திரு அகமது ஸாஹிட் மீது 47 குற்றச்சாட்டு கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் நம்பிக்கைத் துரோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 12 குற்றச்சாட்டுகளும் ஊழல் தொடர்பாக எட்டு குற்றச்சாட்டுகளும்
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவது தொடர்பாக 27 குற்றச்சாட்டு களும் அடங்கும்.
மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் நடத்த வேண்டும்.
ஆனால் தேர்தலை அதற்கு முன்னதாக, கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அம்னோ விருப்பம் தெரிவித்துள்ளது.
திரு இஸ்மாயில் சப்ரி, பிரதமர் பதவி வகித்து ஓராண்டு ஆகிவிட்டது.
திரு அகமது ஸாஹிட்டுக்கும் தமக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது என்று அண்மையில் நடத்தப்பட்ட பேட்டியில் திரு இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
பள்ளிப் பருவத்திலிருந்தே திரு அகமது ஸாஹிட்டைத் தமக்குத் தெரியும் என்றும் அவரும் தமது அண்ணனும் உயிர் நண்பர்கள் என்றும் அவர் கூறினார்.
"பள்ளிக்குச் செல்லாமல் அவரது அறையில் நான் இருந்ததுண்டு. அவரது மனைவியும் குடும்பத்தாரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இன்று வரையிலும் எங்
களிடையே நெருக்கமான உறவு உள்ளது.
"நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரு அகமது ஸாஹிட்டை அவரது வீட்டிற்குச் சென்று சந்திப்பேன். ஆனால் இதை நான் வெளியே சொல்லிக்கொள்வதில்லை.
"அவரைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் செய்தியாளர் கூட்டத்தை நடத்திச் சொல்வதற்கு எனக்கு நேரமில்லை," என்றார் திரு இஸ்மாயில் சப்ரி.
அம்னோவுக்குள் உட்கட்சி பூசல் ஏதுமில்லை என்று அவர்
வலியுறுத்தினார்.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்பட்டாலும் அல்லது அடுத்த ஆண்டு நடத்தப்பட்டாலும் கவனமாகப் பரிசீலனை செய்த பிறகே தேர்தலுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.
அதற்கு முன்பு தற்போது நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கும் பொருளியல் நிலையற்ற
தன்மைக்கும் தீர்வு கண்ட பிறகு பொதுத் தேர்தலின் தேதி குறித்து முடிவெடுக்கலாம் என்று திரு
இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

