லண்டன்: பிரிட்டனின் ஆகப் பெரிய கொள்கலன் துறைமுகத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 2,000 ஊழியர்கள் எட்டு நாள் வேலை
நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிஉள்ளனர்.
பிரிட்டனில் கடந்த 40 ஆண்டு கள் இல்லாத அளவில் பணவீக்கம் அதிகரித்திருப்பதாலும் விலைவாசி உயர்ந்திருப்பதாலும் வாங்கும்
சம்பளம் போதவில்லை என்று அந்த ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதனால் ஃபிலிக்ஸ்டோ துறைமுகத்தில் உள்ள ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். ஆகக் கடைசியாக 1989ஆம் ஆண்டில் அங்கு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
சம்பளம் தொடர்பான விவ
காரங்கள், வேலைச் சூழல்கள் ஆகியவற்றைக் கண்டித்து கடந்த வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாள்களில் பிரிட்டிஷ் ரயில் சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டிஷ் அஞ்சல் துறை ஊழியர்களும் இம்மாதம் நான்கு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிரிட்டனில் பணவீக்கம் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகப் பதிவானது.
இதன் விளைவாக உணவு, எரிசக்தி விலை அதிகரித்து மில்லியன்கணக்கான பிரிட்டிஷ்
மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வாண்டு பணவீக்கம் 13 விழுக்காட்டை எட்டும் என்று இங்கிலாந்து மத்திய வங்கி முன்னுரைத்துள்ளது.
இதனால் ஆழ்ந்த, நீண்ட பொருளியல் மந்தநிலையை பிரிட்டன் எதிர்நோக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, துறைமுக ஊழியர்களின் வேலைநிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்தத் துறைமுகம் ஆண்டுக்கு 2,000 கப்பல்களிலிருந்து ஏறத்தாழ நான்கு மில்லியன் கொள்கலன்
களைக் கையாள்கிறது.
பணவீக்க விகிதத்துக்கு இணையான சம்பள உயர்வை தமது உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் யுனைட் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.