மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நண்பர் அலெக்சாண்டர் டுகினின் மகள் டார்யா டுகினா (படம்) நேற்று கார் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்நீத்தார்.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை அவர் ஓட்டிச்சென்ற கார் தாக்குதலுக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது.
உக்ரேனிய ராணுவத்தின் ரகசியப் பிரிவினர்தான் இதற்குக் காரணமென ரஷ்யாவின் ஃபெடரல் பாதுகாப்புச் சேவை சாடியுள்ளது.
ஆனால் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு ஏதும் இல்லை என்று உக்ரேன் மறுத்துள்ளது.
இந்நிலையில், 1979ஆம் ஆண்டில் பிறந்த உக்ரேனிய மாது இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் தனது பதின்ம வயது மகளுடன் சென்ற ஜூலை மாதத்தில் இருந்து டார்யா தங்கியிருந்த குடியிருப்பிலேயே வாடகை வீட்டில் தங்கி டார்யாவின் நடமாட்டத்தைக் கண்காணித்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.
டார்யாவும் அவரது தந்தையும் கலந்துகொண்ட விழாவிலும் கலந்துகொண்ட அம்மாது தாக்குதலுக்குப் பிறகு எஸ்டோனியாவிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

