ஆறாண்டுக்குப் பிறகு ஈரானில் ஐக்கிய அரபுச் சிற்றரசின் தூதர்

ஆறாண்டுக்குப் பிறகு ஈரானில் ஐக்கிய அரபுச் சிற்றரசின் தூதர்

1 mins read
6564cef3-5cb0-4c91-bb57-412eefadfe94
-

துபாய்: ஈரா­னுக்­கான ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் தூதர் இன்­னும் சில நாள்­களில் தெஹ்­ரா­னுக்­குச் செல்­வார் என்று தெரி­விக்­கப்­பட்டுள்­ளது.

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சவூதி அரே­பி­யா­விற்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில், ஈரா­னுக்­கான தனது தூதரை அது மீட்­டுக்­கொண்­டது.

தூதர் சயிஃப் முக­மது அல் ஸாபி ஈரானில் தமது பொறுப்­பு­களை மீண்­டும் தொட­ரு­வார் என்று ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

ஷியா முஸ்­லிம் தலை­வர் நிமிர் அல்-நிமி­ருக்கு 2016ஆம் ஆண்­டில் ரியாத் மரண தண்­ட­னையை நிறை­வேற்­றி­ய­தைத் தொடர்ந்து ஈரா­னில் உள்ள சவூதி அரே­பி­யா­வின் அர­ச­தந்­தி­ரப் பணி­யி­டங்­கள் தாக்­கப்­பட்­டன.

அதை­ய­டுத்து சவூதி அரே­பி­யா­விற்கு ஆத­ரவு தெரி­வித்து ஐக்­கிய அர­புச் சிற்­ற­ரசு தனது தூதரை ஈரா­னில் இருந்து மீட்­டுக்­கொண்டது.