வாஷிங்டன்: அமெரிக்க அரசாங்கம் அடுத்த பத்து ஆண்டுகளில் பருவநிலைத் தொழில்நுட்பம், கரியமற்ற எரிசக்தி ஆகிய துறைகளில் 514 பில்லியன் டாலரைச் செலவிடும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தொகை 717 பில்லியன் வெள்ளிக்குச் சமம்.
லாப நோக்கமற்ற அமைப்பான 'ஆர்எம்ஐ' நடத்திய ஆய்வு, இருபது ஆண்டுகளுக்கு முன்னர் செலவிடப்பட்டதைவிட அடுத்த ஐந்து ஆண்டுகளில் பருவநிலை மாற்றம், கரியமில வாயு அற்ற எரிசக்தி ஆகியவற்றுக்காக அரசாங்கம் 15 மடங்கு அதிகத் தொகையைச் செலவிடும் என்று கூறுகிறது.
இருப்பினும் இத்தகைய நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினர்.

