பிரிட்டனின் பெரிய தலைவலியாய் மாறிய பிரெஞ்சு கால்வாய்

பிரிட்டனின் பெரிய தலைவலியாய் மாறிய பிரெஞ்சு கால்வாய்

1 mins read
c39a3a2b-43a6-44cc-8bd3-a529b79e42d3
-

லண்­டன்: பிரெஞ்­சுக் கால்­வா­யைக் கடந்து வடக்கு பிரான்­சி­லி­ருந்து பிரிட்­ட­னுக்­குள் சிறிய பட­கு­களில் நுழைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்ளது. நேற்­று­முன்­தி­னம் பிரெஞ்சு கால்­வா­யைக் கடந்த சுமார் 1,295 பேர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக பிரிட்­டிஷ் தற்­காப்பு அமைச்சு கூறி­யது. இதற்கு முன்­னர் ஆக அதி­க­மாக 2021 நவம்­பர் 11ஆம் தேதி, 1,185 பேர் பிரெஞ்சு கால்­வாய் வழியாக பிரிட்­டன் சென்­ற­னர். இவ்­வாண்டு சுமார் 22,670 பேர் பிரெஞ்சு கால்­வாய் வழி பிரிட்­ட­னுக்குள் நுழைந்­துள்­ள­னர். இது 2021ன் இதே கால­கட்­டத்­தை­விட இரட்­டிப்­பா­கும்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தை விட்டு வில­கி­ய­தும் எல்­லை­க­ளைக் கட்டுப் படுத்தி ஆள்­க­டத்­த­லைத் தடுக்­கப்­போ­வ­தாக பிரிட்­டன் உறுதி அளித்­தது. ஆனால் அதிகரிக்­கும் ஆள்கடத்­தல் அரசுக்கு தலை­வலி­யாக மாறியுள்ளது.