மணிலாவில் புயல்: பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன

மணிலாவில் புயல்: பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டன

1 mins read
945ec812-c957-430a-8f05-d15ab29192c8
-

மணிலா: வடக்கு பிலிப்­பீன்சை நேற்று தாக்­கிய கடும் புய­லால் அங்­குள்ள பள்­ளி­களும் அலு­வ­ல­கங்­களும் நேற்று மூடப்­பட்­டன.

கொவிட்-19 பர­வ­லால் ஈராண்டு ­க­ளாக மூடப்­பட்­டி­ருந்த பள்­ளி­கள் திங்­கட்­கி­ழ­மை­தான் மீண்­டும் திறக்­கப்­பட்­டன.

பிலிப்­பீன்­சின் முக்­கிய தீவான லூஸோனை நேற்று காலை­யில் மா-ஓன் எனும் கடும் புயல் மணிக்கு 185 கிலோ­மீட்­டர் வேகத்­தில் தாக்­கி­யது.

மணி­லா­வின் சில பகுதிகளில் வெள்­ளம் ஏற்­பட்­டது.

மலை­கள் நிறைந்த ககா­யான் வட்­டா­ரத்­திலும் கடும் மழை­யால் வெள்­ளம் ஏற்­பட்­டது. மரம் விழுந்து இரு­வர் காய­முற்­ற­னர். ககாயன் ஆறு பெருக்கெடுத்து ஓடியது.