பின்தங்கிய வறுமை ஒழிப்பு முயற்சி

பின்தங்கிய வறுமை ஒழிப்பு முயற்சி

1 mins read
d2f01555-f19e-433c-ac9e-f368dc53505f
கொள்ளைநோய்ப் பரவலால் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் வறுமைக்கு எதிரான போராட்டம் ஈராண்டுகள் பின்தங்கிப்போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

மணிலா: கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லால் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் வறு­மைக்கு எதி­ரான போராட்­டம் குறைந்­தது ஈராண்­டு­கள் பின்­தங்­கிப்­போனதாக 'ஏடிபி' எனும் ஆசிய மேம்­பாட்டு வங்கி தெரி­வித்­துள்­ளது. அத­னால் வறுமை­யி­லி­ருந்து வெளி­வர பல நாடு­கள் மேலும் சிர­மப்­படும் என்று அந்த வங்கி குறிப்­பிட்­டது.

கொள்­ளை­நோய்ப் பர­வல் இடம்­பெ­றா­மல் இருந்­தி­ருந்­தால் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் 2020ஆம் ஆண்டு கடும் வறு­மைக்கு ஆளா­னோ­ரின் விகி­தம் 2.9 விழுக்­கா­டா­கக் குறைந்­தி­ருக்­கும். ஆனால் அதற்­குப் பதி­லாக விகி­தம் ஐந்து விழுக்­கா­ட்டுக்குக் கூடி­யது.

சென்ற ஆண்டு 3.8 விழுக்­காட்­டி­னர் கடும் வறு­மைக்கு ஆளா­ன­தா­கப் பதி­வா­னது. இந்த ஆண்டுக்­கான விகி­தம் மூன்று விழுக்­கா­டாக இருக்­கும் எனக் கணிக்­கப் பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2.70 வெள்ளிக்­கும் குறை­வான தொகை­யைக் கொண்டு வாழ்க்­கையை நடத்­து­வோர் கடும் வறு­மை­யால் பாதிக்­கப்­பட்டவர்கள் என்று வகைப்­படுத்தப்­ப­டு­வர்.

சென்ற ஆண்டு ஆசி­யா­வில் வள­ரும் நாடு­க­ளின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கை­யில் குறைந்­தது 20 விழுக்­காட்­டி­னர் கடும் வறு­மைக்கு ஆளா­யி­னர் அல்­லது ஓரளவு வறு­மை­யால் வாடி­னர். சம­மான பொரு­ளி­யல் வாய்ப்­பு­களை உரு­வாக்­க­வும் சமூக அள­வில் இருக்­கக்­கூ­டிய பொரு­ளி­யல் ரீதி­யான பிரி­வு­க­ளைக் குறைக்­க­வும் அர­சாங்­கங்­கள் மீள்­தி­றன், புத்­தாக்­கம், அனை­வரையும் உள்­ள­டக்­கு­வது ஆகிய அம்­சங்­களில் அதிக கவ­னம் செலுத்­தி­னால் 2030ஆம் ஆண்­டுக்­குள் வறுமை விகி­தத்­தைப் பாதி­யா­கக் குறைக்­க­லாம் என்று ஆசிய மேம்­பாட்டு வங்கி குறிப்­பிட்­டது.

ஒட்­டு­மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யைப் பொறுத்­த­வரை ஆசிய பசி­பிக் நாடு­களில் சுமார் பாதி மட்­டுமே கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய நிலையை அடைந்துள்­ள­தா­க­வும் வங்கி தெரி­வித்­தது.