பெய்ஜிங்: ஈராண்டுகளுக்கும் மேலான காலகட்டத்திற்குப் பிறகு சீனா மீண்டும் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தனது எல்லைகளைத் திறந்துள்ளது. அதன்படி சீனாவில் தங்குவதற்கான அனுமதி வைத்திருப்போரும் 'ஏபெக்' வர்த்தக பயண அட்டையை வைத்திருப்போரும் சீனா செல்லலாம்.
நேற்று முதல் இந்த மாற்றம் நடப்புக்கு வரும் என்று சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 'வீசாட்' தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் சீனத் தூதரகங்களும் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதால் சீனா அதன் கடுமையான கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதாகவோ கொவிட்-19 கிருமிப் பரவலை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்ற அதன் அணுகுமுறை மாறிவிட்டதாகவோ பொருளாகாது என்று அந்நாட்டு அரசாங்கத்தின் குளோபல் டைம்ஸ் ஊடகம் சொன்னது.

