கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வரும் அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி திட்டமிட்டதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்படவிருக்கிறது.
இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் மலேசியாவின் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழித்துதான் தேர்தல் நடைபெறவிருந்தது.
வரவுசெலவுத் திட்டம் அறிவிக்கப்பட்ட மறு வாரமே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று அமைச்சர் ஒருவருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரி கூறினார்.

