'நாசிசத்திற்கு முடிவு கட்டும் வரை படையெடுப்பு'

'நாசிசத்திற்கு முடிவு கட்டும் வரை படையெடுப்பு'

1 mins read
96e05054-0202-469f-8574-d80886ec8887
ர‌ஷ்யத் தாக்குதலில் மரியபோல் நகரில் இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறார் உக்ரேனிய ஆடவர். படம்: ஏஎஃப்பி -

மாஸ்கோ: நேட்டோ கூட்­ட­மைப்­பில் இணைய வேண்­டும் என்ற தனது விருப்­பத்­தில் இருந்து உக்­ரேன் பின்­வாங்­கி­னா­லும் அதன் மீதான ராணுவ நட­வ­டிக்­கையை ர‌ஷ்யா நிறுத்­­தாது என்று ர‌ஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னுக்கு நெருக்­க­மான மூத்த அதி­காரி கூறி­யுள்­ளார்.

பிரெஞ்சு தொலைக்­காட்சி ஒன்­றிற்­குப் பேட்­டி­ய­ளித்த ர‌ஷ்­யா­வின் முன்­னாள் அதி­ப­ரும் ர‌ஷ்ய பாது­காப்பு மன்­றத்­தின் தற்­போ­தைய துணைத் தலை­வ­ரு­மான டிமெட்ரி மெட்­வேட் இத­னைக் கூறி­னார்.

உக்­ரேன் மீதான படை­யெ­டுப்பை, ராணுவ நட­வ­டிக்கை என்று ர‌ஷ்யா கூறி வரு­கிறது.

"நேட்­டோ­வில் இணை­வ­தில் இருந்து பின்­வாங்­கு­வது மிக­வும் முக்­கி­ய­மா­ன­தா­கும். ஆனால், இப்­போ­தைய நில­வ­ரத்­தின்­படி அமை­தியை நிலை­நாட்ட அது போது­மா­னது இல்லை," என்­றார் அவர்.

தனது இலக்கை அடை­யும்வரை உக்­ரேன் மீதான ர‌ஷ்­யா­வின் ராணுவ நட­வ­டிக்கை தொட­ரும் என்று அவர் சொன்­னார்.

உக்­ரே­னில் இருந்து நாசிசத்தை அழிக்க வேண்­டும் என்­பதே தனது விருப்­பம் என்று புட்­டின் கூறு­கி­றார். போருக்­கான ர‌ஷ்­யா­வின் ஆதா­ர­மற்ற சாக்­குப்­போக்கு இது என்று உக்­ரே­னும் மேற்­கத்­திய நாடு­களும் கூறு­கின்­றன.

அத்­து­டன் சில நிபந்­த­னை­களுக்கு உட்­பட்டு உக்­ரே­னிய அதி­பர் ஸெலன்ஸ்­கி­யு­டன் பேச்­சு­வார்த்தை நடத்த ர‌ஷ்யா தயா­ராக உள்­ள­தா­க­வும் மெட்­வேவ் சொன்­னார்.

ர‌ஷ்­யா­வின் ஆறு மாதத்­திற்­கும் மேலான படை­யெ­டுப்­பில், உக்­ரே­னின் பல பகு­தி­கள் தரை­மட்­ட­மாகி­விட்­டன.