செர்டாங்: மலேசிய நாடாளு
மன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும்படி அந்நாட்டில் பலதரப்பினர் விடுத்துள்ள கோரிக்கைக்கு மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
"காத்திருங்கள்," என்று செர்டாங்கில் உள்ள மலேசிய வேளாண்மைப் பூங்காவில் நடைபெற்ற சமூக மேம்பாட்டுத் துறையின் 60ஆம் ஆண்டு கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தி
யாளர்களிடம் கூறினார்.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என்று அண்மையில் அம்னோ தலைவர் அகமது ஸாஹிட் ஹமிடி அழைப்பு விடுத்தார். இல்லாவிடில் தேசிய முன்னனி கூட்டணி தோற்கும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.

