'பருவநிலை மாற்றத்தின் பேரழிவு'

'பருவநிலை மாற்றத்தின் பேரழிவு'

1 mins read
2fa7096c-5446-4ff4-bc6a-805a891c88a7
பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் சங்கார் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பிள்ளைகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு வெளியேறும் மக்கள். படம்: இபிஏ -

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னில்

30 ஆண்­டு­களில் இல்­லாத அளவுக்கு பெரு வெள்­ளம் ஏற்­பட்டு உள்­ள­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் ‌ஷாபாஸ் ‌ஷெரிஃப் கூறி­யுள்­ளார்.

மீட்பு நட­வ­டிக்­கை­க­ளைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள சார்­‌ஷடா பகு­திக்கு நேற்று சென்­றி­ருந்த அவர், "என் வாழ்­நா­ளில் இது­போன்ற மோச­மான வெள்­ளத்­தைப் பார்த்­ததில்லை. நாட்­டின் நாலா­பு­ற­மும் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளது. ‌ எங்­கும் வெள்­ளக்­கா­டாக காட்­சி­ய­ளிக்­கிறது," என்­றார்.

அந்­நாட்­டின் பரு­வ­நிலை அமைச்­சர் ‌ஷெர்ரி ரஹ்­மான், "பாகிஸ்­தான், பரு­வ­நிலை மாற்­றத்­தின் பேர­ழி­வைச் சந்­தித்து வரு­கிறது," என்­றார்.

வெள்­ளத்­தால் 33 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பாகிஸ்­தான் மக்­கள், அதா­வது ஏழு பேரில் ஒரு­வர், பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர்.

வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில், 50,000 வெள்ளி மதிப்­பி­லான உணவு, அவ­ச­ர­கால தங்­கு­மி­டம், தண்­ணீர், சுகா­தா­ரப் பொருள்­களை வழங்க சிங்­கப்­பூர் செஞ்­சி­லுவைச் சங்­கம் முன்­வந்­துள்­ளது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன், துருக்கி உள்­ளிட்ட நாடு­கள் ஏற்­கெ­னவே பாகிஸ்­தா­னுக்கு உத­விக்­க­ரம் நீட்டி­உள்­ளன.

கடந்த ஜூன் மாதம் தொடங்­கிய பரு­வ­ம­ழைக்கு மாண்­டோர் எண்­ணிக்கை ஆயி­ரத்­தைத் தாண்­டி­யது. மில்­லி­யன்­க­ணக்­கான வீடு­கள் இடிந்து விழுந்­தன. பல இடங்­களில் மக்­கள் சாலை­யோ­ரங்­களில் தங்­கி­யுள்­ள­னர். சாலை­கள், பாலங்­கள் சேத­ம­டைந்­த­தால் மீட்­புப் பணி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.