'குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் உடையவை'

'குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் உடையவை'

1 mins read
ceecb35e-1adb-44cc-ba6e-719c488fe026
-

கோலா­லம்­பூர்: மலேசியாவில் பெரிக்கத்தான் நே‌ஷ­னல் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் அர­சி­யல் நோக்­கம் கொண்­டவை என்று அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமிதி கூறி­னார்.

நம்­பிக்கை மோசடி, பண­மோ­சடி, 52.2 மில்­லி­யன் ரிங்­கிட்டுக்கு மேல் லஞ்­சம் கொடுத்­தது உள்­ளிட்ட 47 குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பான விசா­ர­ணை­யின்­போது உயர்­நீ­தி­மன்றத்­தில் அவர் இவ்­வாறு சொன்­னார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லுக்­குப் பிறகு, பக்­கத்­தான் ஹரப்­பான் ஆட்சி அமைத்­த­வு­டன் அதன் அர­சி­யல்­வா­தி­கள் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து விடு­விக்­கப்­பட்ட அதே சம­யத்­தில் தோல்­வி­யடைந்த பெரிக்கத்தான் நே‌ஷனல் கூட்­ட­ணித் தலைவர்­கள்­மீது குற்றம்­சாட்­டப்­பட்­ட­தாக ஸாஹிட் நீதி­மன்றத்­தில் சொன்­ன­தாக மலே­சிய ஊட­கங்­கள் கூறு­கின்­றன.

முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக், அம்­னோ­வின் அக­மது மஸ்­லான் உள்­ளிட்ட 18 பேர்­மீது குற்­றம்­சாட்­டப்­பட்­ட­தாக ஸாஹிட் சொன்­னார்.

டிஏ­பி­ கட்சியின் முன்­னாள் தலைமைச் செய­லா­ளர் லிம் குவான் எங் உள்­ளிட்ட பக்­கத்­தான் கூட்­ட­ணி­யின் 15 பேர் மீதான குற்­றச்­சாட்­டு­கள் திரும்­பப் பெறப்­பட்­ட­தாக மலாய் மெயில் செய்தி கூறு­கிறது. மேலும் அம்னோவின் மற்ற பிரிவு தலைவர்கள் 81 பேர் மீதும் குற்றம்சாட்டப்பட்டதாகவும் அவர் சொன்னார்.