பெண்களைத் தாக்கிய 28 பேர்மீது குற்ற நடவடிக்கை

பெண்களைத் தாக்கிய 28 பேர்மீது குற்ற நடவடிக்கை

1 mins read
df161b5b-73b0-433a-a48d-523c201f036c
-

பெய்ஜிங்: சீனா­வில் உண­வ­கம் ஒன்­றில் பெண்­கள் தாக்­கப்­பட்­ட சம்­ப­வத்­தின் தொடர்­பில் 28 பேர்­மீது குற்ற நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர்.

அவர்­களில் 7 பேர் தாக்­கு­த­லில் நேர­டி­யா­கச் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் என காவல்­துறை சொன்­னது.

பெய்­ஜிங் அரு­கே­யுள்ள டாங்­ஷான் வட்­டார உண­வ­கம் ஒன்­றில் சில ஆட­வர்­கள் 4 பெண்­க­ளைத் தாக்­கும் காணொளி இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

ஆட­வர்­கள் கொடுத்த முன்­பணத்தை அவர்­கள் வாங்க மறுத்­த­தால், பெண்­கள் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதில் பலத்த காயமடைந்த இரண்டு பெண்­கள் சிகிச்சைக்­காக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். இரு­வ­ருக்கு லேசான காயம் ஏற்­பட்­டது.

இதையடுத்து, டாங்‌ஷான் வட்டாரத்தின் துணை தலைமை போலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐந்து பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.