சீனாவில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை: மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்

சீனாவில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை: மக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்

1 mins read
15d6cc38-3765-4cda-bacd-2afc52b6c4aa
-

பெய்­ஜிங்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க சீனா­வில் உள்ள பல பெரிய நக­ரங்­கள் கட்­டுப்­பா­டு­

க­ளைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளன.

சீனா­வில் மில்­லி­யன் கணக்­கா­னோ­ருக்­குக் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வார இறுதி வரை வீட்­டி­லேயே இருக்­கும்­படி தலை­ந­கர் பெய்­ஜிங்­கைச் சுற்­றி­யுள்ள ஹேபேய் மாநி­லத்­தில் ஏறத்­தாழ நான்கு மில்­லி­யன் பேருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. அங்கு சில­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்து, அதைக் கட்­டுப்­ப­டுத்த அதி­கா­ரி­கள் விரைந்­துள்­ள­னர்.

துறை­முக நக­ர­மான தியேன்­ஜின்­னில் 13 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் உள்­ளூர் நேரப்­படி அதி­காலை 6 மணி­யி­லி­ருந்து கூட்­டாக கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

அந்த நக­ரில் 51 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டதை அடுத்த இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது. பாதிக்­கப்­பட்ட 51 பேருக்­கும் இலே­சான பாதிப்பு மட்­டுமே ஏற்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

2.5 மில்­லி­யன் குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளைக் கொண்ட லோங்­ஹுவா மாவட்­டத்­தில் பொழு­து­போக்கு நிலை­யங்­களும் மொத்த வர்த்­த­கச் சந்­தை­களும் மூடப்­பட்­டுள்­ளன. பலர் ஒன்­று­கூ­டும் நிகழ்­வு­க­ளுக்­குத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குடி­யி­ருப்பு வளா­கங்­க­ளுக்­குள் நுழை­வ­தற்கு முன்பு 24 மணி நேரத்­துக்­குள் கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொண்டு கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று மக்­கள் நிரூ­பிக்க வேண்­டும்.

உண­வ­கங்­க­ளுக்­குச் செல்­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் எண்­ணிக்­கை­யும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 50 விழுக்­காடு வாடிக்­கை­யா­ளர்­கள் மட்­டுமே உண­வ­கங்­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வர். இந்­தப் புதிய கட்­டுப்­பா­டு­கள் வரும் சனிக்­கி­ழமை முடி­வுக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.