கியவ்: உக்ரேனின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான கார்கிவ்வை ரஷ்யப் படைகள் குறிவைத்து குண்டு மழை பொழிந்ததாக அந்நகரின் மேயர் இகோர் தெரேக்கோவ் நேற்று தெரிவித்தார்.
தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் மாண்டதாக அவர் கூறினார்.
ஏழு பேர் காயமுற்றதாக தமது டெலிகிராம் கணக்கில் அவர் பதிவிட்டார். ரஷ்யா நடத்தும் தாக்குதல்களால் பாதிப்படையாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று கார்கிவ் மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
ரஷ்யப் படைகள் கார்கிவ் நகரை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றன.

